திங்கள், 7 டிசம்பர், 2015

உன் கூந்தல் கலைக்கிற காற்று 
கர்வப்படுகிறது.

முக அழகை பூசிப்பார்க்கிறது நிலவு.


விழிகளை விருந்துக்கு அழைக்கிற நடசத்திரங்கள்

மின்னுவதை மறக்கிறது.

மாலை உன் நாணத்தில் சிவக்கிறது


நீ நடந்து வருகிறாய்---------


பூமி நனைக்கும் பனித்துளிக்கும் வியர்க்கிறது.


உன் கண்களில்

மிதக்கிற காதலை ஏந்தி கொள்கிற தென்றல்

அதை பூக்களின் மீது இறக்கி வைக்கிறது

புதிய கவிதை எழுதுகிறது இயற்கை.


புன்னகை செய்கிறாய் 

நான் காணாமல் போகிறே்ன்....



                         -வேலணையூர்-தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக