உன் கூந்தல் கலைக்கிற காற்று
கர்வப்படுகிறது.
முக அழகை பூசிப்பார்க்கிறது நிலவு.
விழிகளை விருந்துக்கு அழைக்கிற நடசத்திரங்கள்
மின்னுவதை மறக்கிறது.
மாலை உன் நாணத்தில் சிவக்கிறது
நீ நடந்து வருகிறாய்---------
பூமி நனைக்கும் பனித்துளிக்கும் வியர்க்கிறது.
உன் கண்களில்
மிதக்கிற காதலை ஏந்தி கொள்கிற தென்றல்
அதை பூக்களின் மீது இறக்கி வைக்கிறது
புதிய கவிதை எழுதுகிறது இயற்கை.
புன்னகை செய்கிறாய்
நான் காணாமல் போகிறே்ன்....
-வேலணையூர்-தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக