திங்கள், 7 டிசம்பர், 2015

உன் கனவுகள் கொன்றவர் வாழிய நீடி.

காற்றினை உன் விழி அழாவும்
அந்த கடலுக்கும் ஒரு முறை வேர்க்கும்
ஆற்றொணாய் அழுகையாய் விம்மும்
அந்த பயங்கரம் கண்களில் விரியும்
 
 
கடும் இருள் விரவிய இரவில்
உன் கணவனை இழுத்தவர் சென்றார்
கதறிய உன் குரல் தேய்ந்து காற்றினில் அழிந்தது
உன் வாழ்க்கையும் கூட.
 
அலை தொடும் கரையினில் நிற்பாய்
நினைவுகள் கொன்றிட
நிழலெல்லாம் எரிவாய்
 
ஏங்கியே இழைத்தத தேகம்
உன்னை தெருவினில் எறிந்தது காலம்
உன் துயர் அகலுமோ தோழி
உன் கனவுகள் கொன்றவர் வாழிய நீடி.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக