வியாழன், 26 நவம்பர், 2015

வராய் தைப்பாவாய்!

விடிகாலைப்புள் அகவும்
பண் சுமந்த பாடல் காற்றேறும்
 மண்மலரும் பனி தாங்கி மலராடும் .
கண்விழிக்கும் பொழுது இது
கதிரும் எழுந்துவரும் பெண்ணவளே
விடிகாலைப்பேரழகே
வாராய் தைப்பாவாய்!

காலை எழுந்தோம் கதிர் தொழுதோம்
எண்ணமெல்லாம் இறை நிறைந்தோம்
வண்ணம் பல உடுத்தோம் வரவேற்றோம்
பண்ணிசைகள் பாடிப்பணிந்தோம்.
தண் மகளே தமிழ் அணங்கே
கண்ணிறைந்து வாராய் தைப்பாவாய்!

பொங்கு தமிழ் என்றே புறப்பட்டோம்
கண்பட்டு போதனதுவோ பின் நாளில் புண்பட்டோம்
ஆனாலும் இனம் பட்டுப் போகவில்லை
மீள முயல்வோம் தமிழ் ஆளும் வகை செய்வோம்.
வாழி என வாழ்த்தி எம் வாசல் வாராய் தைப்பாவாய்!

கிழக்கில் ஒளி எழுந்தது காண்
ஏர் உழவர் புத்தரிசி கொண்டு பொங்கலிட்டார்
ஆடலுடன் பாடல் பாடி அகமகிழ்ந்தார்.
 உறவுகளை் நாடி குதுாகலித்தார்.
தேடி நாம் நின்ற திருவே தேன் தழிழணங்கே
ஆடியே வராய் தைப்பாவாய்!

ஆடல் திறனுடை ஆடவர்கள்
 வேட்டியுடுத்தி வெளிக்கிட்டார்
வெடிகொழுத்தி மகிழ்ந்தார்
 போட்டிகள் வைத்தார்
அதில் வீரம் காட்டியே வென்றார்
மாலையில் பாட்டிகள் வைத்தார்
மனதினில் கன்னி நினைவு கூட்டியே களித்தார்
அவர் திறனை கூட்டவே வாராய் குளிராய் தைப்பாவாவாய்!

மென்கை பொன்முக மங்கையர்கள்
 கார்குழல் முடித்து மலர்சூடி
கைவளை திருத்தி கலன்கூட்டி
 கூர்விழிக்கரையில் மையெழுதி
கண்களில் காதலர் நினைவெழுதி
தமிழ் பண்களால் உன்னையே போற்றி வந்தார்
. சிறு நங்கையர் அவர் தன்னை வாழ்த்தி
ஆசி நல்கியே வருவாய் தைப்பாவாய்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக