வானம் வைரமாய்
சொரிகிறது நட்சத்திரங்களை .
மேகம் இறங்கி மேயும்
வயற்கரைகளில்
எழுந்து பறக்கிறது செங்கால் நாரை.
கண்களில் கவிதையை சேமிக்கிற பெண்கள்
தேவதைபோல் இறங்கி வருகிறார்கள்.
ஆயிரம் வானவில்லை
ஒன்றாக கட்டி கொண்டு வந்து
மலிவாக விற்கிறார்கள்.
இப்படி அழகான கனவுகள்
இருந்தன எமக்கு -------
கனவுகளுக்காவே இரவு வரை
காத்திருந்தன கண்கள்.
இன்று கனவுகளின் காட்சி
மாறிப்போனது.
புதைகுழிகளில் இருந்து பிள்ளைகள்
தலையில்லாமல் எழுந்து வருகிறார்கள்.
கையொன்று அறுந்த
தன்பிள்ளையை ஏந்தி
கதறுகிறாள் ஒரு தாய் .
கதற கதற அவளை
யாரோ இழுத்துச் செல்கிறார்கள்
அவள் கண்ணீர் நதியாய் நீள்கிறது
பின் நெருப்பாகி
வனமெங்கும் எரிகிறது
நானும் எரிகிறேன்.-----
சொரிகிறது நட்சத்திரங்களை .
மேகம் இறங்கி மேயும்
வயற்கரைகளில்
எழுந்து பறக்கிறது செங்கால் நாரை.
கண்களில் கவிதையை சேமிக்கிற பெண்கள்
தேவதைபோல் இறங்கி வருகிறார்கள்.
ஆயிரம் வானவில்லை
ஒன்றாக கட்டி கொண்டு வந்து
மலிவாக விற்கிறார்கள்.
இப்படி அழகான கனவுகள்
இருந்தன எமக்கு -------
கனவுகளுக்காவே இரவு வரை
காத்திருந்தன கண்கள்.
இன்று கனவுகளின் காட்சி
மாறிப்போனது.
புதைகுழிகளில் இருந்து பிள்ளைகள்
தலையில்லாமல் எழுந்து வருகிறார்கள்.
கையொன்று அறுந்த
தன்பிள்ளையை ஏந்தி
கதறுகிறாள் ஒரு தாய் .
கதற கதற அவளை
யாரோ இழுத்துச் செல்கிறார்கள்
அவள் கண்ணீர் நதியாய் நீள்கிறது
பின் நெருப்பாகி
வனமெங்கும் எரிகிறது
நானும் எரிகிறேன்.-----
--------------------வேலணையூர்-தாஸ்
---------ஞானம்-டிசம்பர்-20 13
---------ஞானம்-டிசம்பர்-20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக