சனி, 10 மே, 2014

கொல்கின்ற கனவுகள்

வானம் வைரமாய்
சொரிகிறது நட்சத்திரங்களை .

மேகம் இறங்கி மேயும்
வயற்கரைகளில்
எழுந்து பறக்கிறது செங்கால் நாரை.

கண்களில் கவிதையை சேமிக்கிற பெண்கள்
தேவதைபோல் இறங்கி வருகிறார்கள்.

ஆயிரம் வானவில்லை
ஒன்றாக கட்டி கொண்டு வந்து
மலிவாக விற்கிறார்கள்.

இப்படி அழகான கனவுகள்
இருந்தன எமக்கு -------

கனவுகளுக்காவே இரவு வரை
காத்திருந்தன கண்கள்.

இன்று கனவுகளின் காட்சி
மாறிப்போனது.

புதைகுழிகளில் இருந்து பிள்ளைகள்
தலையில்லாமல் எழுந்து வருகிறார்கள்.

கையொன்று அறுந்த
தன்பிள்ளையை ஏந்தி
கதறுகிறாள் ஒரு தாய் .

கதற கதற அவளை
யாரோ இழுத்துச் செல்கிறார்கள்

அவள் கண்ணீர் நதியாய் நீள்கிறது
பின் நெருப்பாகி

வனமெங்கும் எரிகிறது
நானும் எரிகிறேன்.-----
      
            --------------------வேலணையூர்-தாஸ்

---------ஞானம்-டிசம்பர்-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக