![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-xiFF2Pdrv3CvhQkDs39HX7h9ZE0JiWijDcy3DqI78ekU9CS8N2tm-hS3hJNa1KsuSrVKDREqNLNbZO_pL91V8Gx1E_nzK2j3GTgsK3qOyRAlKTfc-RbbaBmvRTYRgq7aBVBDnEBpmubA/s200/SOORIYAN+FM.jpg)
சூரியப் புதல்வியே
கன்னிக்கவிதைகளின் அரங்கே
கனவுகளின் ஊர்வலமே
முகுந்தனின் முகவுரையும்
மணிவண்ணன் மணிக்குரலும்
லங்கேசின் லாவகமும்
தரணியின் தத்துவமும்
இன்னும் பெயரறியா சொல்லாளர்களால்
நீ அழகுபெறுகிறாய்
ராத்திரியின் நாயகியே
எம் அதிகாலை
கவிதைக்கனவே
இன்னிசையோடு இன் கவி தந்து
இதயம் நிறைந்தாய்
சில கவிதை சீறியெழும்
சில கவிதை சோகம் சொல்லும்
காதல் சிறகில் பறந்து வரும் சில கவிதை
கனவுகளை அள்ளி வரும்
காலை விடிந்தாலும் ரீங்காரம்
மனதினிலே ஓசையிடும்
ரீங்காரம் என்றும் ஒலிக்கட்டும்
தமிழ்க்கவிதை வாழட்டும்.
வேலணையுர் தாஸ்
சூரியன் ரீங்காரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக