திங்கள், 22 மார்ச், 2010

காதில் என்றும் ரீங்காரம்




சூரியப் புதல்வியே
கன்னிக்கவிதைகளின் அரங்கே
கனவுகளின் ஊர்வலமே
முகுந்தனின் முகவுரையும்
மணிவண்ணன் மணிக்குரலும்
லங்கேசின் லாவகமும்
தரணியின் தத்துவமும்
இன்னும் பெயரறியா சொல்லாளர்களால்
நீ அழகுபெறுகிறாய்
ராத்திரியின் நாயகியே
எம் அதிகாலை
கவிதைக்கனவே
இன்னிசையோடு இன் கவி தந்து
இதயம் நிறைந்தாய்
சில கவிதை சீறியெழும்
சில கவிதை சோகம் சொல்லும்
காதல் சிறகில் பறந்து வரும் சில கவிதை
கனவுகளை அள்ளி வரும்
காலை விடிந்தாலும் ரீங்காரம்
மனதினிலே ஓசையிடும்
ரீங்காரம் என்றும் ஒலிக்கட்டும்
தமிழ்க்கவிதை வாழட்டும்.

வேலணையுர் தாஸ்

சூரியன் ரீங்காரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக